திருக்குறள்

1120.

அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்.

திருக்குறள் 1120

அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்.

பொருள்:

அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு, என் காதலியின் காலடிகள்அவ்வளவு மென்மையானவை.

மு.வரததாசனார் உரை:

அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.

சாலமன் பாப்பையா உரை:

உலகம் மென்மைக்குச் சொல்லும் அனிச்சம் பூவும், அன்னப் பறவையின் இளஞ்சிறகும், என் மனைவியின் பாதங்களுக்கு நெருஞ்சிப்பழம் போல வருத்தம் தரும்.